இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர் தீவிரவாதிகள் இருவர் கைது

DIN

ஜம்மு-காஷ்மீரில், புட்காம் மாவட்டத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது, 

காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரும் புட்காமில் தடைசெய்யப்பட்ட பாதுகாப்பு அமைப்பான லஷ்கர் தொடர்புடைய இரண்டு தீவிரவாதிகளை கைது செய்துள்ளனர். 

புட்காமின் சன்னெர்குண்ட் பகுதியிலிருந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவர் தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் வசிக்கும் வசீம் அகமது கணாய் மற்றும் இக்பால் அஷ்ரப் ஷேக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

அவர்களிடம் இருந்து கைத்துப்பாக்கி உள்ளிட்ட பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவதாக  காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

ஆய்வுக்குப் பிறகே ரேஷனில் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம்: பிரேமலதா கோரிக்கை

பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை கூடாது: எஸ்சிஓ கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்

பாதுகாப்பான பயண சேவை: அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT