முகப்பு
இந்தியா

8 பேர் கொலை: கொல்கத்தாவில் பாஜகவினர் போராட்டம்

மேற்கு வங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கொல்கத்தாவில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:49 AM
பகிர்:

மேற்கு வங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து கொல்கத்தாவில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேற்கு வங்க மாநிலம் பீா்பூம் மாவட்டம் ராம்புராட் பகுதியில் பா்ஷால் கிராம ஊராட்சித் துணைத் தலைவா் பாது ஷேக் என்பவா் திங்கள்கிழமை (மார்ச் 21) இரவு கொலை செய்யப்பட்டாா்.  இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள போக்டுய் கிராமத்தில் 8 வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் 2 சிறாா்கள், பெண்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்.

இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

தொடர்ந்து இந்த விவகாரத்தில் மாநில அரசு குற்றம் சாட்டி வரும் பாஜக இன்று கொல்கத்தாவில் போராட்டம் நடத்தி வருகிறது. பாஜக தலைவர் சுகந்த மஜூம்தர் தலைமையில் ஏரளாமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

முன்னதாக, மேற்கு வங்க சட்டப்பேரவையில் பீர்பூம் விவகாரம் மற்றும் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்து விவாதிக்க பாஜக வலியுறுத்தி அது மறுக்கப்பட்டதால் திரிணமூல், பாஜகவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 5 பாஜக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →