இந்தியா

காசிரங்கா தேசியப் பூங்காவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அசாமின் காசிரங்கா தேசியப் பூங்காவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

DIN

அசாமின் காசிரங்கா தேசியப் பூங்காவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

காசிரங்கா பூங்காவின் முக்கிய உயிரினங்களில் ஒன்றான காண்டாமிருகங்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக பூங்கா இயக்குநர் ஜதிந்தர சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘2018-ஆம் ஆண்டு காசிரங்கா பூங்காவில் 2,413 காண்டாமிருகங்கள் இருந்தன. இந்நிலையில், தீவிரக் கண்காணிப்பு மற்றும் வேட்டையாளர்களை நெருங்க விடாமல் பாதுகாத்ததில் கடந்த 4 ஆண்டுகளில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 200  அதிகரித்துள்ளது இந்தாண்டு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதனால், பூங்காவில் தற்போது 2,613 காண்டாமிருகங்கள் உள்ளன’ எனத் தெரிவித்துள்ளார்.

காசிரங்கா பூங்காவில் காண்டாமிருகங்கள் உள்ள  864 சதுர கிலோமீட்டர் பரப்பளவு பகுதியில் மார்ச் 25-28 வரை இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

SCROLL FOR NEXT