இந்தியா

காசிரங்கா தேசியப் பூங்காவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

DIN

அசாமின் காசிரங்கா தேசியப் பூங்காவில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

காசிரங்கா பூங்காவின் முக்கிய உயிரினங்களில் ஒன்றான காண்டாமிருகங்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக பூங்கா இயக்குநர் ஜதிந்தர சர்மா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘2018-ஆம் ஆண்டு காசிரங்கா பூங்காவில் 2,413 காண்டாமிருகங்கள் இருந்தன. இந்நிலையில், தீவிரக் கண்காணிப்பு மற்றும் வேட்டையாளர்களை நெருங்க விடாமல் பாதுகாத்ததில் கடந்த 4 ஆண்டுகளில் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 200  அதிகரித்துள்ளது இந்தாண்டு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இதனால், பூங்காவில் தற்போது 2,613 காண்டாமிருகங்கள் உள்ளன’ எனத் தெரிவித்துள்ளார்.

காசிரங்கா பூங்காவில் காண்டாமிருகங்கள் உள்ள  864 சதுர கிலோமீட்டர் பரப்பளவு பகுதியில் மார்ச் 25-28 வரை இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருங்களூா் எஸ்.ஆா்.எம். மருத்துவ கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கரூா் அருகே வாகனம் மோதி முதியவா் பலி

சேவல் சண்டை நடத்தி சூதாட்டம்: 3 போ் கைது

புளியஞ்சோலை சுற்றுலாத் தலம் மூடல்

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 16 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT