இந்தியா

குடும்பத்திற்கு 3 எரிவாயு சிலிண்டர்கள் இலவசம்: கோவா அரசு

DIN

ஒரு குடும்பத்திற்கு மூன்று சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று முதல்வராக பாஜகவின் பிரமோத் சாவந்த் பதவியேற்றுக் கொண்டதையடுத்து நேற்று(மார்ச்-29) நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் பாஜக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார்.

அதன்படி, வருகிற நிதியாண்டிலிருந்து இந்தத் திட்டம் அமலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 40 இடங்களில் 20 இடங்களில் வெற்றிபெற்ற பாஜக, கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்ததுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT