இந்தியா

ஏப்ரல் மாதம் அனல் தகிக்குமா? வானிலை ஆய்வு மையம் தகவல்

IANS


புது தில்லி: நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் இரண்டாவது வெப்ப அலை வீசிக்கொண்டிருக்கும் நிலையில், ஏப்ரல் மாதமும், இதுபோல அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியா, வடகிழக்கு இந்திய பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் இதர பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையை விட இயல்பானது முதல் குறைந்த அளவில் பதிவாகும் என்றும், வடமேற்கு, மத்திய மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தென்பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பான அளவில் அல்லது இயல்பை விட குறைவாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் இரண்டு வெப்ப அலைகள் உருவானது, ஒன்று மார்ச் 11 - 21 வரையிலும், மற்றொன்று மார்ச் 26ல் தொடங்கி தற்போது வரை வீசி வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT