பிகாரில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்: 79.88% தேர்ச்சி
பிகாரில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன.
பிகாரில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கரோனா கட்டுப்பாடுகளுக்கு இடையே பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகியுள்ளன.
பிகாரில் 16.11 லட்சம் மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் 12,86,971 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதனால் மொத்த மாணவர்களில் 79.88 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
படிக்க | மின்சார வாகனங்கள் விற்பனையில் இந்தியா 162% வளர்ச்சி: நிதின் கட்கரி
Advertisement
இதில் முதல் நிலையில் 4,24,587 மாணவர்களும், இரண்டாவது நிலையில் 5,10,411 மாணவர்களும், மூன்றாவது நிலையில் 3,47,637 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2022ஆம் ஆண்டு பொதுத்தேர்விலும் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகளை biharboard.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.