முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 3,324 பேருக்கு கரோனா

​இந்தியாவில் புதிதாக 3,324 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:07 AM
கோப்புப்படம்
பகிர்:


இந்தியாவில் புதிதாக 3,324 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை புதிதாக 3,688 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 3,324 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, நாட்டில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 4,30,79,188 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 2,876 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 40 பேர் தொற்று பாதிப்புக்கு பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 4,25,36,253 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,23,843 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 19,092 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி:

நாட்டில் மேலும் 25,95,267 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 1,89,17,69,346 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.