உ.பி.யில் 66% சிறார்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டன
உத்தரப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 66 சதவீத சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 66 சதவீத சிறார்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில்,
மாநிலத்தில் 31.5 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 12-14 வயதுக்குட்பட்டவர்களுக்கு 58.52 லட்சம் டோஸ்களும், 15-17 வயதுக்குட்பட்டவர்களுக்கு 2.28 கோடி டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு 19.99 கோடி டோஸ்களும், 45-60 வயதுக்குட்பட்டவர்களுக்கு 6.12 கோடி டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன. முதியோர்களுக்கு 3.55 கோடி டோஸ்கள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளது.
15-17 வயதுக்குட்பட்ட பிரிவில், 66 சதவீத சிறார்களுக்கு முழுமையாகத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 12-14 வயது சிறார்களுக்கு 63 சதவீதம் முதல் டோஸ் எடுத்துள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 193 பேருக்கு புதிதாக தொற்று பதிவாகியுள்ளன. அதேசமயம் 159 நோயிலிருந்து மீண்டுள்ளனர். சிகிச்சையில் 1,621 பேர் உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.