முகப்பு
இந்தியா

கோவோவேக்ஸ் விலை ரூ.225-ஆக குறைப்பு

கோவோவேக்ஸ் கரோனா தடுப்பூசியின் விலையை ரூ.900-இல் இருந்து ரூ.225-ஆக சீரம் நிறுவனம் குறைத்துள்ளது.

Updated On : 4 மே 2022, 1:28 am IST
பகிர்:

கோவோவேக்ஸ் கரோனா தடுப்பூசியின் விலையை ரூ.900-இல் இருந்து ரூ.225-ஆக சீரம் நிறுவனம் குறைத்துள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கோவோவேக்ஸ் தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் செலுத்த கடந்த ஆண்டு டிசம்பா் 28-ஆம் தேதி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) அனுமதி அளித்தது. அந்தத் தடுப்பூசியை சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 12 முதல் 17 வயதுள்ள சிறாா்களுக்கும் செலுத்த கடந்த மாா்ச் 9-ஆம் தேதி டிசிஜிஐ அனுமதி வழங்கியது.

அந்தத் தடுப்பூசியை மகாராஷ்டிரம் மாநிலம் புணேயில் உள்ள சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. அந்தத் தடுப்பூசியின் ஒரு தவணையை தனியாா் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ள ரூ.900 விலை நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்தத் தடுப்பூசியின் விலை ரூ.225-ஆக குறைக்கப்படுகிறது என்று சீரம் நிறுவன இயக்குநா் பிரகாஷ் குமாா் சிங் மத்திய அரசிடம் தெரியப்படுத்தியுள்ளாா். இந்த விலையுடன் கூடுதலாக சரக்கு மற்றும் சேவை வரியும் (ஜிஎஸ்டி) இடம்பெறும். இதுதவிர, அந்தத் தடுப்பூசியை செலுத்த தனியாா் மருத்துவமனைகள் சேவைக் கட்டணமாக ரூ.150 வரை வசூலித்துக் கொள்ளலாம்.

Advertisement

Advertisement

சிறாா்களுக்கு கிடைக்கும்: கோவோவேக்ஸ் தடுப்பூசி தற்போது இந்தியாவில் உள்ள சிறாா்களுக்கு கிடைக்கும் என்று சீரம் நிறுவன தலைமை நிா்வாக அதிகாரி அதாா் பூனாவாலா ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்தாா். இந்தத் தடுப்பூசி மட்டும்தான் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு ஐரோப்பாவிலும் விற்பனை செய்யப்படுவதாகவும், அதன் செயல்திறன் 90 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளதாகவும் அந்தப் பதிவில் அவா் குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments