முகப்பு
இந்தியா

12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோவோவேக்ஸ் தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம்: ஆதார் பூனாவல்லா

12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கான கோவோவேக்ஸ் கரோனா தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தி கொள்ளலாம் என்று

Updated On : 5 மே 2022, 12:00 pm IST
ஆதார் பூனாவல்லா
பகிர்:

புனே: 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கான கோவோவேக்ஸ் கரோனா தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தி கொள்ளலாம் என்று  சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவல்லா புதன்கிழமை கூறினார்.

பெரியவர்களுக்கு கோவோவேக்ஸ் கிடைக்குமா என்ற கேள்விக்கு, 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கோவோவேக்ஸ் கிடைக்கும் என்று பூனாவல்லா சுட்டிரையில் கூறியுள்ளார்.

கோவோவேக்ஸ் தடுப்பூசி இந்தியாவில் குழந்தைகளுக்காகக் கிடைக்கிறது. இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒரே தடுப்பூசி ஆகும். இது ஐரோப்பாவிலும் விற்கப்படுகிறது மற்றும் 90 சதவீத செயல்திறன் கொண்டது. இது நமது குழந்தைகளைப் பாதுகாக்க பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப உள்ளது என்று அவர் சுட்டிரையில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

கடந்த வாரம், நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (என்.டி.ஏ.ஜி.ஐ) 12-17 வயதிற்குட்பட்டோருக்கான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவோவேக்ஸ் கரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது.

கடந்த ஆண்டு டிசம்பரில், அவசரகால சூழ்நிலையில் கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டிற்காக அரசாங்கம் கோவோவேக்ஸை அனுமதித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments