மம்தா பானர்ஜி 
இந்தியா

‘சமையல் எரிவாயு விலை உயர்வால் மக்கள் பாதிப்பு’: மம்தா விமர்சனம்

சமையல் எரிவாயு உருளை விலை உயர்வின் மூலம் நாட்டு மக்களை மத்திய அரசு துன்புறுத்தி வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

DIN

சமையல் எரிவாயு உருளை விலை உயர்வின் மூலம் நாட்டு மக்களை மத்திய அரசு துன்புறுத்தி வருவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

சமையல் எரிவாயு உருளையின் விலையை ரூ.50 உயர்த்தி மத்திய அரசு சனிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. இதன்மூலம் நாடு முழுவதும் சமையல் எரிவாயு உருளையின் விலை ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக சனிக்கிழமை பேசிய மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் மத்திய அரசு நாட்டு மக்களை வஞ்சித்து வருவதாகவும், மக்களின் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு எனும் பெயரில் பெரும் கொள்ளை நடந்து வருவதாகவும் குற்றம்சாட்டினார். 

முன்னதாக கடந்த 2 மாதத்தில் சமையல் எரிவாயு உருளையின் விலை இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT