மேலும் 1,422 பேருக்கு கரோனா பாதிப்பு
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிகாக 1,422 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிகாக 1,422 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் இறப்பு ஏதும் பதிவாகவில்லை. அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 5.34 சதவீதமாகப் பதிவானது என்று மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மொத்தம் 26,647 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 18,94,254-ஆக உயா்ந்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,179-ஆக உள்ளது. நகரில் சனிக்கிழமை 1,407 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. 2 இறப்புகளும், 4.72 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின. வெள்ளிக்கிழமை 1,656 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவானது. இது கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதிக்குப் பிறகு பதிவாகும் அதிகபட்ச பாதிப்பாகும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Caption
(கோப்புப்படம்)