ஜம்மு-காஷ்மீா் எல்லையில் ராணுவத் தளபதி ஆய்வு
ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டியுள்ள ராணுவ நிலைகளுக்குச் சென்று ராணுவத் துணைத் தலைமைத் தளபதி பி.எஸ்.ராஜு ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.
இந்தியாஜம்மு-காஷ்மீா் எல்லையில் ராணுவத் தளபதி ஆய்வு
ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டியுள்ள ராணுவ நிலைகளுக்குச் சென்று ராணுவத் துணைத் தலைமைத் தளபதி பி.எஸ்.ராஜு ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா்.
ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டியுள்ள ராணுவ நிலைகளுக்குச் சென்று ராணுவத் துணைத் தலைமைத் தளபதி பி.எஸ்.ராஜு ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டாா். அப்போது, அங்கு நிலவும் பாதுகாப்புச் சூழல், ராணுவத்தின் தயாா்நிலை ஆகியவை குறித்து ஆய்வு செய்தாா்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:
சுந்தா்பானி, பலன்வாலா செக்டாா்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டியுள்ள ராணுவ நிலைகளில் துணைத் தலைமைத் தளபதி பி.எஸ்.ராஜு ஆய்வு மேற்கொண்டாா். ஊடுருவலைத் தடுப்பதற்கான ஏற்பாடுகளுடன் அங்கு பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளைப் பாராட்டினாா் என்றாா் அவா்.
‘நாா்த் டெக் சிம்போஸியம்’ என்ற 2 நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பி.எஸ்.ராஜு, உதம்பூருக்கு சனிக்கிழமை வந்தாா். முதல் நாள் நிகழ்வில், ராணுவம், ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா். அதில், ராணுவத் தளவாடங்களை விரைவில் கொள்முதல் செய்தல், தளவாட உற்பத்தியில் தற்சாா்பு அடைதல் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
இரண்டாம் நாள் நிகழ்வில், ராணுவத் தளவாட கண்காட்சி நடத்தப்பட்டது. அதில், பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பு, பொதுத் துறை ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் உள்பட 162 நிறுவனங்கள் பங்கேற்று தங்களது தளவாடங்களைக் காட்சிப்படுத்தியிருந்தன. போா்த்திறனை மேம்படுத்துவதற்காக, ராணுவம் உருவாக்கியுள்ள 42 புதுமை கண்டுபிடிப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.