இந்தியா

'அசானி' புயல்: நாளை காலை 11 மணிக்கு கரையைக் கடக்கிறது

DIN

வங்கக் கடலின் மத்திய மேற்குப் பகுதியில் நிலைகொண்டுள்ள அசானி புயல் நாளை (மே 11) காலை 11 மணி முதல் காக்கிநாடா - விசாகப்பட்டிணம் இடையே கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பிற்பகல் ஆந்திரக் கடலோரப் பகுதியில் காக்கிநாடா - விசாகப்பட்டிணம் (கிருஷ்ணா, கிழக்கு - மேற்கு கோதாவரி) இடையே வலுவிழக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

புயல் காரணமாக ஆந்திர கடலோரப்பகுதிகளில் 75 - 85 கிலோமீட்டர் வேகத்திலும், ஒடிசா கடலோரப்பகுதிகளில் 45 - 55 கிலோமீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

புயல் காரணமாக கடலோரப் பகுதிகளிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மேலும் தேசிய பாதுகாப்பு மீட்புப் படையினர் ஒடிசா மற்றும் ஆந்திரக் கடலோரப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். 

அசானி புயல் காரணமாக ஆந்திரத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையை சேர்ந்த 9 குழுக்களும், ஒடிசாவில் 17 குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT