முகப்பு
இந்தியா

இந்தியாவில் மீண்டும் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கரோனா

இந்தியாவில் புதிதாக 2,288 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:12 AM
கோப்புப்படம்
பகிர்:

புதுதில்லி: இந்தியாவில் புதிதாக 2,288 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. திங்கள்கிழமை 3,207 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) 2,288 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 3,044 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 10 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.


இதுவரை மொத்தம் 4,25,63,949 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,24,103 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 19,637 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி:

கடந்த 24 மணி நேரத்தில் 13,90,912 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை மொத்தம் 1,90,50,86,706 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →