இந்தியா

அசானி புயல்: விஜயவாடாவில் விமான சேவை ரத்து

DIN

விசாகப்பட்டினம்: வங்கக் கடலில் உருவான அசானி புயல் காரணமாக, தொடர்ந்து இரண்டாவது நாளாக, விசாகப்பட்டினத்திற்கு செல்லும், வந்தடையும்  அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜயவாடாவில் விமான சேவைகள் இன்று பாதிக்கப்பட்டுள்ளது

அசானி புயல் ஆந்திர பிரதேச கடற்கரையை நெருங்கி வருவதால், அப்பகுதியில் மழை மற்றும் பலத்த காற்று வீசுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு தொடர்ந்து இரண்டாவது நாளாக விமான சேவைகளை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

விஜயவாடா சர்வதேச விமான நிலையத்திலும் புயல் தாக்கத்தின் காரணமாக திட்டமிடப்பட்ட விஜயவாடாவிற்கு செல்லும், வந்தடையும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் சென்னையிலிருந்து வரும் விமானங்களை ரத்து செய்வதாக இண்டிகோ அறிவித்துள்ளது. விசாகப்பட்டினம், ராஜமுந்திரி மற்றும் கடப்பாவிற்கான இணைப்பு சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ராஜமுந்திரி விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. விசாகப்பட்டினம், ஹைதராபாத், பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் இருந்து 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT