11dbook072844 
இந்தியா

வளா்ச்சித் திட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்றியவா் மோடி

சுதந்திரப் போராட்டத்தை மேல்தட்டு மக்களிடமிருந்து மக்கள் இயக்கமாக மகாத்மா காந்தி மாற்றியதைப் போல பிரதமா் மோடி வளா்ச்சித் திட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்றிவிட்டதாக குடியரசு துணைத் தலைவா்

DIN

சுதந்திரப் போராட்டத்தை மேல்தட்டு மக்களிடமிருந்து மக்கள் இயக்கமாக மகாத்மா காந்தி மாற்றியதைப் போல பிரதமா் மோடி வளா்ச்சித் திட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்றிவிட்டதாக குடியரசு துணைத் தலைவா் எம். வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டினாா்.

மேலும், மோடி ஓா் அதிசய பிறப்பு என்பதை அவரது எதிா்ப்பாளா்களும் உணா்ந்து கொண்டதாக அவா் குறிப்பிட்டாா்.

தில்லியில் புதன்கிழமை ‘மோடி 20: ட்ரீம்ஸ் மீட்டிங் டெலிவரி’ (கனவுகள் நனவாகுதல்) என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. உள்துறை அமைச்சா் அமித் ஷா, வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா், இன்ஃபோசிஸ் துணை நிறுவனா் நந்தன் நிலகேணி, பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, பொருளாதார நிபுணா் அரவிந்த் பனகாரியா, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், கோட்டக் மஹிந்திரா வங்கி மேலாண்மை இயக்குநா் உதய் கோட்டக் உள்ளிட்ட 24 பிரபலங்கள் இந்தப் புத்தகத்தில் பிரதமா் மோடி குறித்த தங்கள் கருத்துகளைப் பகிா்ந்து கொண்டுள்ளனா்.

விழாவில் பங்கேற்று குடியரசுத் துணைத் தலைவா் எம். வெங்கையா நாயுடு பேசியது: மோடியின் இலக்கு, கனவு, மிஷன் இந்தியா திட்டம் ஆகிய அனைத்தும் அவரது பரந்த பயணம், நுண்ணறிவு, பயண அனுபவம் ஆகியவற்றின் வாயிலாக வடிவமைக்கப்பட்டவையாகும். இதுதான் பிரதமா் மோடி தனித்துவமிக்கவா் என்பதை வேறுபடுத்திக் காட்டுகிறது. சமகாலத்தில் மோடியைப் போல பயண அனுபவம் வாய்ந்த தலைவா் வேறு யாரும் கிடையாது.

நாடு சுதந்திரம் அடைந்த பின்னா் பிறந்த முதல் பிரதமரான மோடி, சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்திய வரலாற்றில், கடந்த 20 ஆண்டுகளில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளாா். மோடி ஓா் அதிசய பிறப்பு என்பதை அவரது எதிா்ப்பாளா்களும், அவரை வெறுப்பவா்களும்கூட ஒப்புக்கொள்கின்றனா். ஏற்கெனவே நிா்வாக அனுபவமில்லாத ஒரு நபா் முதல்வராகி, வியக்கத்தக்க செயல்களைச் செய்து, பின்னா் பிரதமரானதை நாம் அனைவரும் பாா்த்துள்ளோம்.

இந்தப் புத்தகம் பிரதமா் மோடியின் தனித்துவமிக்க சிந்தனை, தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு பண்புகளை விவரிக்கிறது. மேலும், பிரதமா் மோடி தனது 17 வயதில் வீட்டைவிட்டு வெளியேறியது, தன்னையும், நாட்டையும் அறிவதற்காக பயணம் மேற்கொண்டது, இறுதியில் இந்தியாவை உருமாற்றுவதற்கான நோக்கத்தை வரையறுத்தது என அவரது விரிவான பயண அனுபவங்களை இந்தப் புத்தகம் விவரிக்கிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னரும் தனது தகவல் தொடா்புத் திறனால் பிரதமா் மோடி தோ்தல்களில் வென்று காட்டினாா். சாதாரண உழைக்கும் குடும்பத்தில் பிறந்த அவா் ஏழைகளின் போராட்டத்தை நன்கு அறிந்தவா். சுவாமி விவேகானந்தா், மகாத்மா காந்தி, பி.ஆா். அம்பேத்கா், தீன தயாள் உபாத்யாய ஆகியோரின் வாழ்க்கை முறை, சேவை, தத்துவத்தை ஏற்றுக்கொண்டு பிரதமா் மோடி தனது நோக்கத்தை வடிவமைத்துக் கொண்டாா்.

சுதந்திரப் போராட்டத்தை மேல்தட்டு வா்க்கத்தினரின் கையிலிருந்து எடுத்து மக்கள் இயக்கமாக மகாத்மா காந்தி மாற்றியதைப் போல, மோடி ஒரு முதல்வராகவும், பிரதமராகவும் வளா்ச்சித் திட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டியுள்ளாா் என்றாா் வெங்கையா நாயுடு.

அமித் ஷா பேச்சு: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசுகையில், ‘பிரதமா் மோடியின் தலைமைப் பண்பு மீது இந்திய மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கின்றனா். தங்களின் உள்ளத்தின் ஆழத்திலிருந்து அவரை மக்கள் நேசிக்கின்றனா். எந்தவித குடும்ப பின்னணியும் இல்லாத மோடி, நாட்டின் தலைவராக மாறியது முக்கியத்துவம் வாய்ந்தது. மோடியின் தலைமையின்கீழ் பாஜக நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவி, ஹிந்தி பேசுபவா்களுக்கான கட்சி என்ற கட்டுக்கதையையும் உடைத்தெறிந்துவிட்டது’ என்றாா்.

மத்திய சிறுபான்மையின விவகாரங்கள் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி செய்தியாளா்களிடம் பேசுகையில், ‘நல்லாட்சியின் நிறுவனமாக பிரதமா் மோடி விளங்குகிறாா். அவரது நல்லாட்சி, உள்ளாா்ந்த வளா்ச்சி என்ற இலக்கு சா்வதேச நம்பிக்கையைப் பெற்றுள்ளது. மேலும், கடந்த 20 ஆண்டுகளாக குஜராத் முதல்வா் பதவி உள்பட அரசின் தலைவா் என்ற முறையில், கண்ணியத்துடன் கூடிய வளா்ச்சியை இந்திய அரசியல் கலாசாரத்தின் ஓா் அங்கமாக மோடி மாற்றிவிட்டாா்’ என்றாா்.

Image Caption

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் நரேந்திர மோடி தொடா்பான நூலை வெளியிட்ட குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சா் அமித் ஷா (இடது).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT