முகப்பு
இந்தியா

தில்லியில் ஏப்ரல் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் ரூ. 2898 கோடி

2022-23 நிதியாண்டின் முதல் மாதத்தில் தில்லி ஜிஎஸ்டி வசூல் ரூ.2,898 கோடியாக  இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்ததுள்ளது.

Updated On : 13 மே 2022, 11:59 am IST
கோப்புப்படம்
பகிர்:

புது தில்லி: 2022-23 நிதியாண்டின் முதல் மாதத்தில் தில்லி ஜிஎஸ்டி வசூல் ரூ.2,898 கோடியாக  இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்ததுள்ளது.

தில்லியின் ஏப்ரல் மாதத்திற்கான   ஜிஎஸ்டி வசூல் இதுவே அதிகபட்சம் ஆகும்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கரோனா தொற்றின் மூன்று அலைகளால் ஏற்பட்ட பேரழிவுக்குப் பிறகு தேசிய தலைநகரின் பொருளாதாரம் விரைவாக மீண்டு வருவதற்கான சிறந்த அடையளமாக ஜிஎஸ்டி வசூல் உள்ளது.

ஏப்ரல் 2021-22ல் ஜிஎஸ்டி வசூல் ரூ.2,325 கோடியாக இருந்தது. 2020-21ல் ரூ.320 கோடியாக இருந்தது குறிப்பிடதக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments