ஆன்லைன் தேர்வே வேண்டும்! ஜாமியா பல்கலை. மாணவர்கள் போராட்டம்
ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வலியுறுத்தி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வலியுறுத்தி ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், தேர்வுகளை நேரடியாக வகுப்பறைகளில் வைப்பதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
படிக்க | வருவாய் குறைவு: 150 பேரை பணியிலிருந்து நீக்கியது நெட்ஃப்ளிக்ஸ்
Advertisement
Advertisement
தில்லியிலுள்ள ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. நீண்ட மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வகுப்பறைகளில் தேர்வுகள் நடத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வகுப்புகளை ஆன்லைனில் நடத்திவிட்டு தேர்வை மட்டும் வகுப்பறையில் வைப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜாமியா பல்கலைக் கழகத்தில் கரோனா காரணமாக வகுப்புகள் இணையவழியில் நடைபெற்ற நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு மட்டுமே வகுப்புகளில் பாடம் நடத்தப்பட்டது.
இதனால் தேர்வையும் இணைய வழியிலேயே வைக்க வலியுறுத்தி பல்கலைக் கழக அலுவலகத்தின் முன்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.