இந்தியா

தில்லியில் கனமழை: விமான சேவைகள் பாதிப்பு

தில்லியில் இன்று அதிகாலை பெய்த கனமழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

DIN

தில்லியில் இன்று அதிகாலை பெய்த கனமழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. 

இதனால் ஆங்காங்கே சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் தலைநகரில் இன்று அதிகாலை பெய்த கனமழை காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளன. தில்லியைத் தவிர உத்தரப் பிரதேசமம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களிலும் இன்று அதிகாலை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குச் சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

மழையால் உள்வாங்கிய பாலம்: பொதுமக்கள் அவதி

வடிகால் ஆறுகளில் காயத்தாமரைகளை அகற்ற வலியுறுத்தல்

வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள தயாா்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

நாகை காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT