தில்லியில் இன்று அதிகாலை பெய்த கனமழை காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் இன்று அதிகாலை கனமழை பெய்தது. தில்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பல இடங்களில் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.
இதனால் ஆங்காங்கே சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க- ஆஸி. புதிய பிரதமராக ஆன்டனி ஆல்பனேசி பதவியேற்பு
மேலும் தலைநகரில் இன்று அதிகாலை பெய்த கனமழை காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளன. தில்லியைத் தவிர உத்தரப் பிரதேசமம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களிலும் இன்று அதிகாலை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.