கார்த்தி சிதம்பரம்(கோப்புப்படம்) 
இந்தியா

கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு

விசா மோசடி விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

DIN

விசா மோசடி விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

விதிமுறைகளை மீறி ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றுக்கொண்டு 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ, அவருக்குத் தொடர்புடைய 10 இடங்களில் கடந்த வாரம் சோதனை நடத்தியது. இதன்பிறகு, அவரது ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டு சிபிஐ காவலில் உள்ளார்.

இந்நிலையில், விசா மோசடி விவகாரத்தில் அமலாக்கத்துறையும் கார்த்தி சிதம்பரத்தின் மீது புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதற்கிடையே, வெளிநாட்டிலிருந்து இன்று தில்லி திரும்பும் கார்த்தி சிதம்பரம் மாலை சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகவுள்ளார். பாஸ்கரராமனிடம் விசாரணை நடத்தியதில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்க வாய்ப்புள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT