இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,828 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் கரோனா பாதிப்பு குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 2,828 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்படும் தினசரி விகிதம் 0.60%.
மேலும் 2,035 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,26,11,370 பேர் குணமடைந்துள்ளனர்.
இதையும் படிக்க | இந்தியா திராவிடர்களுக்கும், ஆதிவாசிகளுக்கும்தான் சொந்தம்: ஒவைசி
கடந்த 24 மணி நேரத்தில் 14 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 5,24,586 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 17,087 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தடுப்பூசி:
மேலும் 13,81,764 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதுவரை மொத்தம் 1,93,28,44,077 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.