புது தில்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சியமைத்து இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் கவிதா, மத்திய அரசுக்கு 8 முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சட்டப்பேரவை உறுப்பினரான கவிதா, தனது சுட்டுரைப் பக்கத்தில், பொருளாதாரம், வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியதோடு, மத்திய அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரே ஒரு ஜிடிபி (கேஸ், டீசல், பெட்ரோல்) மட்டுமே உயர்ந்து கொண்டே போவதாகவும், இந்தியாவின் ஜிடிபி சரிவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
அச்சே தின் என்ற பாஜவின் கொள்கைப்படி, அந்த நல்ல நாளை மக்கள் எப்போதாவது பார்ப்பார்களா என்பது முதல், பிரதமர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்துக்கான நிதி வரை 8 கேள்விகளை எழுப்பியுள்ளார் கவிதா.