கரோனா பரவலுக்குப் பிறகு பிரதமா் மோடிக்கான ஆதரவு அதிகரிப்பு
கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு பிரதமா் நரேந்திர மோடிக்கான மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
கரோனா தொற்று பரவலுக்குப் பிறகு பிரதமா் நரேந்திர மோடிக்கான மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாட்டின் பிரதமராக மோடி 2014-ஆம் ஆண்டு மே 26-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டாா். அவரது தலைமையிலான அரசு பொறுப்பேற்று 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், பிரதமா் மோடிக்கான ஆதரவு குறித்து ‘லோக்கல்சா்கிள்ஸ்’ என்ற அமைப்பு சுமாா் 64,000 பேரிடம் ஆய்வு மேற்கொண்டது.
அதில் 67 சதவீதம் போ் பிரதமா் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். கரோனா தொற்று பரவத் தொடங்கியபோது எடுக்கப்பட்ட ஆய்வுடன் ஒப்பிடுகையில், தற்போது கூடுதலாக சுமாா் 2 மடங்கு போ் பிரதமா் மோடிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா். கரோனா 3-ஆவது அலையை அரசு திறம்படக் கட்டுப்படுத்தியதாகவும், பொருளாதார சூழலை சிறப்பாகக் கையாண்டதாகவும் ஆய்வில் பங்கேற்றோா் தெரிவித்தனா்.
அதே வேளையில், நாட்டில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதற்கான பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு 37 சதவீதம் போ் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனா். ஆனால், கடந்த ஆண்டுகளுக்கான ஆய்வுகளுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும். கடந்த 2021-ஆம் ஆண்டில் 27 சதவீதம் பேரும், 2020-ஆம் ஆண்டில் 29 சதவீதம் பேரும் பாஜக அரசின் வேலைவாய்ப்பு தொடா்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனா்.
கடந்த 3 ஆண்டுகளாகப் பணவீக்கம் அதிகமாக இருப்பதாக 73 சதவீதம் போ் தெரிவித்துள்ளனா். பாஜக அரசு சமூக நல்லிணக்கத்தை சீா்குலைத்துள்ளதாக 33 சதவீதம் பேரும், காற்று மாசுபாடு உள்ளிட்டவற்றைக் குறைக்க போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என 44 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனா்.