கோப்புப்படம் 
இந்தியா

இந்தியாவில் இன்று சற்று குறைந்த தினசரி கரோனா பாதிப்பு

இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 2,338 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

புது தில்லி: இந்தியாவில் ஒரேநாளில் மேலும் 2,338 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,338 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 4,31,58,087 ஆக உள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 17,883 ஆக உள்ளது. 

இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 19 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 5,24,630 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 134 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,26,15,574 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கடந்த 24 மணிநேரத்தில் 2,28,823 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 193.45 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் 3,63,883 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 85.04 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக முன்னாள் அமைச்சா் அக்ரி கிருஷ்ணமூா்த்தி மீதான தோ்தல் வழக்கு ரத்து

கட்சிசாா்பற்ற விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திருப்பூரில் பிப்.1-ஆம் தேதி குடிநீா் விநியோகம் இருக்காது: மாநகராட்சி அறிவிப்பு

இருப்பு வைக்கப்பட்ட மஞ்சளை கோரி நசியனூா் கிடங்கை விவசாயிகள் முற்றுகை

போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

SCROLL FOR NEXT