புதிய தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவி ஏற்க தடைக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வழக்குறைஞர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி யு.யு.லலித், மனுவை விசாரிக்க எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி தலைமை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் நவம்பா் 8-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளாா். நவம்பர் 9 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் 50-வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்கவுள்ளார்.
டி.ஒய்.சந்திரசூட் தலைமை நீதிபதியாக 2 ஆண்டுகள் பதவி வகிப்பாா். 2024-ஆம் ஆண்டு நவம்பா் 10-ஆம் தேதி அவா் ஓய்வு பெறுவாா்.