இந்தியா

மாட்டிறைச்சி வைத்திருந்ததற்காக அரைநிர்வாணமாக்கி தாக்குதல்: சத்தீஸ்கரில் கொடூரம்

DIN

சத்தீஸ்கரில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி இருவரை அடித்து அரை நிர்வாணமாக இழுத்துச் சென்று காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 

சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் நர்சிங் தாஸ் மற்றும் ராம்நிவாஸ் மேகர் ஆகிய இருவரும் மாட்டுக்கறியை விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்றதாகத் தெரிகிறது. இதனை அறிந்த அப்பகுதியினர் சிலர் அவர்களிடம் இறைச்சி குறித்து விசாரித்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து இருவரும் தாக்கப்பட்டு அவர்களது ஆடைகள் களையப்பட்டு அரைநிர்வாணமாக சாலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் இதனை விடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்ட கொடுமை நடந்துள்ளது. 

இதுகுறித்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி அவ்விருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்துள்ளனர். அவர்களிடமிருந்து 33.5 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டது. 

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி இருவர் பொதுவெளியில் தாக்குதலுக்குள்ளான நிலையில் அவர்கள் மீதே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT