குருத்வாராவில் ராகுல் காந்தி வழிபாடு!
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தின் இடையே இன்று குருத்வாராவில் வழிபாடு செய்தார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமை நடைப்பயணத்தின் இடையே இன்று குருத்வாராவில் வழிபாடு செய்தார்.
மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில்ஒற்றுமை நடைப் பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முன்னெடுத்துள்ளார்.
கன்னியாகுமரியில் தொடங்கி தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானாவைத் தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ஒற்றுமை நடைப்பயணத்தின் இடையே இன்று குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு மகாராஷ்டிரத்தில் உள்ள குருத்வாராவில் வழிபாடு செய்தார்.
இதுகுறித்து ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில், 'குருநானக்கின் அன்பு, அமைதி மற்றும் சகோதரத்துவம் பற்றிய போதனைகளைப் பயன்படுத்துவதன் மூலம், இந்தியாவை ஒன்றிணைக்கும் உறுதியை நிறைவேற்றுவோம். நாட்டு மக்கள் அனைவருக்கும் குருநானக் ஜெயந்தி வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டுள்ளார்.