இந்தியா

புணே சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல்: 2 பேர் காயம்! 

DIN

மகாராஷ்டிரத்தின் புணே நகரில் உள்ள ஏர்வாடா மத்தியச் சிறையில் கைதிகள் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், சிறை ஊழியர்கள் இருவர் காயமடைந்தனர். 

இச்சம்பம் செவ்வாய்க்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது. சிறைக்குள் இருந்த மற்றொரு குழு மீது கைதிகளின் குழு கற்கள் மற்றும் ஓடுகள் வீசியதாக ஏர்வாடா காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார். 

கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சிறை ஊழியர்கள் தலையிட முயன்றபோது, சிறை கைதிகளில் சிலர் கற்களை வீசி 2 சிறை ஊழியர்களைக் கடுமையாகத் தாக்கினர்.

காயமடைந்த சிறை ஊழியர்கள் சிகிச்சைபெற்று வருகின்றனர். 

புகாரின் அடிப்படையில், ஐந்து கைதிகள் பின்னர் கைது செய்யப்பட்டு, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT