இந்தியா

மாலத்தீவில் தீ விபத்து: 9 இந்தியர்கள் உள்பட 10 பேர்பலி!

மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

DIN

மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

நேற்று நள்ளிரவு மாலேயில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 

இதுகுறித்து மாலத்தீவு தீயணைத்து துறை அதிகாரி கூறுகையில், 

அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் தரைதளத்தில் வாகனம் பழுதுபார்க்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது கட்டடத்தின் மேல் தளத்திற்குப் பரவியது. இதில் 10 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. 

தீயை அணைக்க சுமார் 4 மணி நேரம் போராடியதாக அவர் தெரிவித்தார். 

உயிரிழந்த 10 பேரில் 9 பேர் இந்தியர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் தகவல்களை வெளியுறவுத்துறை சேகரித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு இந்தியத் தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

2021 ராஜஸ்தான் போலீஸ் எஸ்ஐ தேர்வு ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு

SCROLL FOR NEXT