இந்தியா

மாலத்தீவில் தீ விபத்து: 9 இந்தியர்கள் உள்பட 10 பேர்பலி!

மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

DIN

மாலத்தீவு தலைநகர் மாலேவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

நேற்று நள்ளிரவு மாலேயில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். 

இதுகுறித்து மாலத்தீவு தீயணைத்து துறை அதிகாரி கூறுகையில், 

அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் தரைதளத்தில் வாகனம் பழுதுபார்க்கும் இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயானது கட்டடத்தின் மேல் தளத்திற்குப் பரவியது. இதில் 10 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது. 

தீயை அணைக்க சுமார் 4 மணி நேரம் போராடியதாக அவர் தெரிவித்தார். 

உயிரிழந்த 10 பேரில் 9 பேர் இந்தியர்கள் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் தகவல்களை வெளியுறவுத்துறை சேகரித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களுக்கு இந்தியத் தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2014 - 22 ஆண்டுகளுக்கான திரைப்பட, சின்ன திரை விருதுகள் அறிவிப்பு!

முதல் டி20யில் ஆஸ்திரேலிய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த பாகிஸ்தான்!

தேவைப்பட்டால் கூட்டணி குறித்து OPSயிடம் பேசுவேன்! |செய்திகள் : சில வரிகளில் | 29.1.26

இந்த வார ஓடிடி படங்கள்!

”நல்லவர்கள் எல்லாம் எங்கள் பக்கம்!” OPS குறித்த கேள்விக்கு நயினார் நாகேந்திரன் பதில்!

SCROLL FOR NEXT