இந்தியா

கட்சித் தலைவரை கத்தியால் வெட்டும் யாசகர்! (விடியோ)

DIN


ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரை சாமியார் வேடமிட்ட ஒருவர், யாசகம் கேட்பதைப்போன்று நடித்து, கத்தியால் வெட்ட முயற்சிக்கும் விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்திலுள்ள துனி என்ற பகுதியில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் பி. சேஷகிரி ராவ் வசித்து வருகிறார். 

இந்நிலையில், அவரின் வீட்டு வாசலில் சாமியார் வேடமிட்ட ஒருவர் அவரைக் கத்தியால் தாக்குவதைப் போன்ற விடியோ வெளியாகியுள்ளது. 

சாமியார் வேடமிட்ட ஒருவர் யாசகம் கேட்பதைப் போன்று சேஷகிரி ராவ்-இன் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டிலிருந்து வெளியே வந்த சேஷகிரி ராவ், அந்த சாமியார் வேடமிட்டவருக்கு யாசகம் வழங்கும்போது, அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வெட்ட முயற்சித்துள்ளார்.

சேஷகிரி நிலைகுலைந்து விழும் வரை, அவரை கத்தியால் குத்தியுள்ளார். அலரல் சத்தம் கேட்டு சேஷகிரி வீட்டினர் வெளியே வருவதற்குள், சாமியார் வேடமிட்டவர் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றுள்ளார்.

தலையிலும், கழுத்திலும் பலத்த காயமடைந்த சேஷகிரி ராவ், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

SCROLL FOR NEXT