வாக்காளர்களைக் கவரும் பாஜக: நவ.20-ல் மெகா பேரணி!
மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களைக் கவரும் வகையில் நவம்பர் 20-ம் தேதி தேசிய தலைநகரில் பாஜக சார்பில் மெகா பேரணி நடத்தவுள்ளது.
மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களைக் கவரும் நோக்கில் நவம்பர் 20-ம் தேதி தேசிய தலைநகரில் பாஜக சார்பில் மெகா பேரணி நடத்தவுள்ளது.
இந்த மெகா பேரணியில் 14 தேசிய தலைவர்கள் கலந்துகொண்டு, தில்லியில் உள்ள 14 மாவட்டங்களிலும் உள்ள மக்களைச் சந்தித்து பாஜகவின் கொள்ளைகளைத் தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தனக்கு ஆதரவாக அதிக வாக்குகளைப் பெறுவதற்கான பாஜகவின் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்றும், இதில் பங்கேற்கும் தலைவர்கள் தங்கள் செல்வாக்கின்படி பல பகுதிகளுக்குச் செல்வார்கள் என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.