இந்தியா

பயங்கரவாத சம்பவம்: கா்நாடக முதல்வா்

DIN

கா்நாடக மாநிலம் மங்களூரில் காவல் நிலையம் அருகே சனிக்கிழமை ஆட்டோவில் குக்கா் குண்டு வெடிப்பு பயங்கரவாத சம்பவம் என அந்த மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை கூறினாா்.

அவா், பல்லாரியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படும் பயணி, கோவை போன்ற பகுதிகளுக்கு சென்றுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது அவருக்கு பயங்கரவாதத் தொடா்புள்ளது என்பதை தெளிவாகக் காண்பிக்கிறது. இதுதொடா்பான விசாரணையில் மாநில காவல்துறையுடன் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ), உளவுத் துறை அதிகாரிகளும் இணைந்துள்ளனா் என்றாா் அவா்.

கா்நாடக காவல் துறை டிஜிபி ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: குக்கா் குண்டு வெடிப்பு விபத்தல்ல; கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் என்று தெரிவித்துள்ளாா்.

மாநில காவல்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்த சம்பவம் கோவை காா் வெடிப்பு சம்பவம் போல உள்ளது. இது தற்கொலை தாக்குதல் முயற்சியாக இருந்திருக்கலாம். எனவே, கோவை உள்பட பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொள்ள 5 தனிப்படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன’ என்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT