இந்தியா

அருணாச்சல பிரதேசம், நாசிக்கில் லேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.8 ஆகப் பதிவு!

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள லெபா-ராடா மாவட்டத்தில் உள்ள பாசார் நகரில் புதன்கிழமை காலை 7:1 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

DIN

இட்டாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள லெபா-ராடா மாவட்டத்தில் உள்ள பாசார் நகரில் புதன்கிழமை காலை 7:1 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.8 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. .

தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிக்கையின் படி, புதன்கிழமை காலை சுமார் 7:1 மணியளவில் பாசர் நகரின் 58 கி.மீ வட-மேற்குகில் பூமிக்கு அடியில்10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நாசிக்: இதேபோன்று மகாராஷ்டிரம் மாநிலம் நாசிக் அருகே புதன்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவாகி உள்ளது. 

தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிக்கையின் படி, புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் நாசிக்கிற்கு மேற்கே 89 கி.மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 5 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT