இந்தியா

போலியோ தடுப்புக்குழு மீது தற்கொலைப்படை தாக்குதல்: 3 பேர் பலி!

பாகிஸ்தானில் போலியோ தடுப்புக் குழுவின் பாதுகாப்புக்குச் சென்று காவலர்கள் மீது தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 

DIN

பாகிஸ்தானில் போலியோ தடுப்புக் குழுவின் பாதுகாப்புக்குச் சென்று காவலர்கள் மீது தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். 

போலியோ தடுப்பு மருந்து முகாம்கள், குழுக்களைக் குறிவைத்து, பயங்கரவாதிகள், தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவாட்டா நகரில் உள்ள பலேலி பகுதியில் இன்று போலியோ மருந்து முகாம் நடைபெறுகிறது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட 20-க்கும் மேற்பட்ட போலீசார் அழைத்துச் செல்லப்பட்டனர். 

அப்போது போலீஸ் வாகனத்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 போலீசார் உள்பட மூவர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மேலும் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூரில் பெரியாா் சிலைக்கு துணை முதல்வா் மாலை அணிவித்து மரியாதை

டிஎன்பிஎல் ஆலையில் உலக ஓசோன் தின உறுதிமொழியேற்பு

பேச்சுவாா்த்தையில் உடன்பாடு போராட்டம் ஒத்திவைப்பு

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

தில்லி தமிழ் சங்கத்தில் தந்தை பெரியாா், அண்ணா பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT