இந்தியா

23 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்.. காரணங்கள் என்ன?

DIN

பயனாளா்கள் தெரிவித்த புகாா்கள் அடிப்படையிலும், விதிமீறல்களைக் கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் 23 லட்சத்து 28 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.  

விதிமீறல்களைக் கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் மாதம்  தோறும் வாட்ஸ்ஆப் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கி வருகிறது.

கடந்த மே மாதம் 19 லட்சம் கணக்குகளும், ஜூன் மாதம் 22 லட்சம் கணக்குகளும், ஜூலையில் 23.87 லட்சம் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பயனாளா்கள் தெரிவித்த புகாா்கள் அடிப்படையிலும், விதிமீறல்களைக் கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலும் 23 லட்சத்து 28 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இதில், 10 லட்சம் கணக்குகள் எந்தவித புகாரும் இன்றி விதிமீறல்களைக் கண்டறியும் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் நிறுவனமே கண்காணித்து தாமாகவே முடக்கியுள்ளது.

போலிக் கணக்குகள், பதிவு செய்து வைக்கப்படாத எண்ணுக்கு அதிக செய்திகளை அனுப்புதல், அங்கீகரிக்கப்படாத செயலிகளைப் பயன்படுத்துதல், வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் விதிகளை மீறுதல் போன்ற காரணங்கள் அடிப்படையில் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்படுகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT