முகப்பு
இந்தியா

குருகிராமில் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலி, மூவர் காயம்!

குருகிராமில் பழைய தொழிற்சாலை கட்டடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார், மூவர் காயமடைந்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:29 AM
பகிர்:

குருகிராமில் பழைய தொழிற்சாலை கட்டடம் இடிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார், மூவர் காயமடைந்தனர். 

இதுகுறித்து போலீசார் கூறுகையில், 

உத்யோக் விஹார் கட்டம் 1இல் இடிந்து விழுந்த தொழிற்சாலையின் இடிபாடுகளிலிருந்து 4 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

இன்று காலை 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்தபோது, 12-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலையை இடிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

மூன்று மாடிக் கட்டிடத்தை இடிக்கும் பணி கடந்த செப்டம்பர் 26-ம் தேதி முதல் நடைபெற்று வருவதாகவும், தொழிற்சாலையின் 2 தளங்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கடைசி தளத்தின் மேற்கூரை உள்வாங்கியதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்ததும் சிவில் பாதுகாப்புப் படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →