முகப்பு
இந்தியா

குஜராத்: ரூ.350 கோடி ஹெராயின் பறிமுதல்! 

குஜராத்தில் ரூ.350 மதிப்புள்ள 50 கிலோ ஹெராயின் போதைப்பொருள்களை இந்தியக் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
(கோப்புப்படம்)
பகிர்:

குஜராத்தில் ரூ.350 கோடி மதிப்புள்ள 50 கிலோ ஹெராயின் போதைப்பொருள்களை இந்தியக் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். 

இந்தியக் கடலோர காவல் படையினர் மற்றும் குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படை இணைந்து நடத்திய சோதனையில், சர்வதேச கடல் பகுதியின் அருகே 6 பணியாளர்களுடன் பயணித்த அல் சாகர் என்ற பாகிஸ்தான் கப்பலில் ரூ.350 கோடி மதிப்பிலான 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும், விசாரணைக்காக, அவர்கள் ஜகா பகுதிக்குக் கொண்டு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு முதல் இந்தியக் காவல்படை, ஏடிஎஸ் இணைந்து நடத்தும் 6வது சோதனை இதுவாகும். 

முன்னதாக, கடந்த செப்.14ல் பாகிஸ்தான் படகு ஒன்றில் சுமார் ரூ.200 கோடி மதிப்புள்ள 40 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →