முகப்பு
இந்தியா

பிகாரில் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொலை

பிகார் மாநில அரசின் உத்தரவைத் தொடர்ந்து ஆட்கொல்லி புலியை  வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:31 AM
(கோப்புப்படம்)
பகிர்:

பிகார் மாநில அரசின் உத்தரவைத் தொடர்ந்து ஆட்கொல்லி புலியை  வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

பிகார் மாநிலத்தில் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ளது வால்மீகி புலிகள் சரணாலயம். இந்த சரணாலயத்தில் நாட்டிலேயே அதிகளவாக 40 புலிகள் உள்ளன. 

இந்நிலையில் இந்த சரணாலயத்திலிருந்து புலி ஒன்று அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்குள் கடந்த செப்.12ஆம் தேதி நுழைந்தது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். 

இதுவரை 9 பேரை கொன்றுள்ள புலியைப் பிடிக்க வனத்துறையினரும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். எனினும் இதுவரை அந்தப் புலியைப் பிடிக்க முடியவில்லை. 

இந்நிலையில் ஆட்கொல்லி புலியைப் கண்டதும் சுட்டுக் கொல்ல மாநில அரசு சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் 3.5 வயதான ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →