(கோப்புப்படம்) 
இந்தியா

பிகாரில் ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொலை

பிகார் மாநில அரசின் உத்தரவைத் தொடர்ந்து ஆட்கொல்லி புலியை  வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

DIN

பிகார் மாநில அரசின் உத்தரவைத் தொடர்ந்து ஆட்கொல்லி புலியை  வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

பிகார் மாநிலத்தில் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ளது வால்மீகி புலிகள் சரணாலயம். இந்த சரணாலயத்தில் நாட்டிலேயே அதிகளவாக 40 புலிகள் உள்ளன. 

இந்நிலையில் இந்த சரணாலயத்திலிருந்து புலி ஒன்று அருகில் இருந்த குடியிருப்பு பகுதிக்குள் கடந்த செப்.12ஆம் தேதி நுழைந்தது. இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். 

இதுவரை 9 பேரை கொன்றுள்ள புலியைப் பிடிக்க வனத்துறையினரும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். எனினும் இதுவரை அந்தப் புலியைப் பிடிக்க முடியவில்லை. 

இந்நிலையில் ஆட்கொல்லி புலியைப் கண்டதும் சுட்டுக் கொல்ல மாநில அரசு சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் 3.5 வயதான ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளர் உயிரிழந்தால் ரூ.35 லட்சம் நிவாரணம்: உ.பி. அரசு

ரஷிய அதிபர் புதினுடன் பேசிய மோடி!

பகலை இரவாக்கிய கருமேகங்கள் - புகைப்படங்கள்

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு| செய்திகள்: சிலவரிகளில் |7.10.25

உலகக் கோப்பை: இங்கிலாந்துக்கு எதிராக 178 ரன்களுக்கு ஆட்டமிழந்த வங்கதேசம்!

SCROLL FOR NEXT