இந்தியா

கேரள நரபலி விவகாரம்: உடலை சாப்பிட்டதாகக் கூறுவதை மறுக்கும் குற்றவாளிகள்

DIN

கேரளத்தில் இரு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் நரபலி கொடுக்கப்பட்டவர்களை சாப்பிட்டதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளனர்.

குற்றவாளிகளான லைலா மற்றும் அவரது கணவர் பகவல் சிங் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்க அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, லைலா நாங்கள் நரபலி கொடுத்தவர்களை சாப்பிடவில்லை எனத் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த கொலை வழக்கில் கைதாகியுள்ள மூவரையும் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, காவல் துறை தரப்பில் கொடுக்கப்பட்ட தகவலின்படி இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அந்தத் தம்பதி நரபலி கொடுக்கப்பட்டவர்களை சாப்பிட்டதாக காவல் துறை தரப்பில் தகவல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த குற்றச்சாட்டினை குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான லைலா மறுத்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT