இந்தியா

விரைவில் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள்: ரயில்வே புதிய திட்டம்!

முக்கிய ரயில் நிலையங்களில் 3 ஆண்டுகளில் மின்சார வாகன(EV) சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் நடவடிக்கையை ரயில்வே எடுத்து வருகிறது.

DIN

முக்கிய ரயில் நிலையங்களில் 3 ஆண்டுகளில் மின்சார வாகன(EV) சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் நடவடிக்கையை ரயில்வே எடுத்து வருகிறது.

இ-மொபைலிட்டியை மேம்படுத்தும் புதிய கொள்கையின் கீழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் நாட்டின் அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களை இந்திய ரயில்வே அமைக்க உள்ளது.

40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட பெரிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் முதல் கட்டமாக மின்சார வாகன (EV) சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளது. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் இரண்டாம் கட்டமாக  அமைக்க உள்ளது.

டிசம்பர் 2024-க்குள் மும்பை, தில்லி, பெங்களூர், ஹைதராபாத், அகமதாபாத், சென்னை, கொல்கத்தா, புனே மற்றும் சூரத் ஆகிய ரயில் நிலையங்களில் மின்சார வாகன(EV)  சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே 2025 ஆம் ஆண்டுக்குள் எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டை கணிசமாகக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்திய ரயில்வே இணையத்தில் உள்ள மீதமுள்ள மின்மயமாக்கப்பட்ட நிலையங்களில், மண்டல ரயில்வேயின் சாத்தியக்கூறு ஆய்வுகளின் அடிப்படையில், டிசம்பர் 2026-க்குள் மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவினின் மரணம் கடைசியாக இருக்குமா? அஞ்சலி செலுத்தியபின் Seeman பேட்டி!

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கல் எறிந்தவருக்கும் பேறு...

நாயன்மார்கள் குரு பூஜை...

SCROLL FOR NEXT