இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் மேலும் ஒரு காஷ்மீரி பண்டிட் சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த மேலும் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த மேலும் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

சோபியானில் உள்ள சௌத்ரி குண்ட் கிராமத்தைச் சேர்ந்த தாரக் நாத் பட் என்பவரின் மகன் பூரன் கிருஷ்ணா பட் இன்று தீவிரவாதிகளால் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். 

அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான காயங்களுடன் உயிரிழந்தார். 

அந்த பகுதி முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடத்திற்கு மூத்த காவல்துறை மற்றும் துணை ராணுவ அதிகாரிகள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 

முன்னதாக, ஆகஸ்ட் 16ஆம் தேதி, சோபியான் மாவட்டத்தின் சோதிகம் கிராமத்தைச் சேர்ந்த சுனில் குமார் பட் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த தாக்குதலில் அவரது சகோதரர் பெர்டிம்பர் நாத் பட் காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

SCROLL FOR NEXT