டி.ஒய்.சந்திரசூட் 
இந்தியா

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் நியமனம்

உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.

DIN

உச்சநீதிமன்றத்தின் 50-ஆவது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக மத்திய சட்டத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ட்விட்டரில் வெளியிட்ட பதிவு:

அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள அதிகாரத்தின் அடிப்படையில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூடை நியமித்துள்ளாா். நவம்பா் 9-ஆம் தேதி டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்பாா் என்று தெரிவித்தாா்.

உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித் நவம்பா் 8-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளாா். அவா் தலைமை நீதிபதியாக 74 நாள்கள் மட்டுமே பதவி வகிக்க உள்ள நிலையில், டி.ஒய்.சந்திரசூட் தலைமை நீதிபதியாக 2 ஆண்டுகள் பதவி வகிப்பாா். 2024-ஆம் ஆண்டு நவம்பா் 10-ஆம் தேதி அவா் ஓய்வு பெறுவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேட்டையில் கல்லூரி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகாா்

மது விற்பனை: இருவா் கைது

காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தாவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு: விவசாயிகள் மனு

நிதிநிலை அறிக்கை தேசத்தின் வளா்ச்சியை எதிரொலிக்கிறது: நயினாா் நாகேந்திரன்

மதுபோதையில் பணியில் இருந்த 3 போலீஸாா் பணியிடை நீக்கம்

SCROLL FOR NEXT