மாயாவதி 
இந்தியா

‘தலித்துகளை பலிகடாவாக்கும் காங்கிரஸ்’: மாயாவதி விமர்சனம்

காங்கிரஸ் கட்சி தலித் தலைவர்களை பலிகடாவாக பயன்படுத்துவதாக உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி விமர்சனம் தெரிவித்துள்ளார். 

DIN

காங்கிரஸ் கட்சி தலித் தலைவர்களை பலிகடாவாக பயன்படுத்துவதாக உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி விமர்சனம் தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் பெரும்பாலான வாக்குகள் பெற்று மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அதேசமயம் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்தத் தேர்தலை விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளன. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலித் தலைவர்களை பலி ஆடுகளாக பயன்படுத்துவதாக உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். 

இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில், “பாபாசாகேப் அம்பேத்கரையும் அவரது சமூகத்தின் பங்களிப்பையும் மதிக்காமல் தொடர்ந்து தவிர்த்து வந்ததை காங்கிரஸ் கட்சியின் வரலாறே நமக்கு சாட்சியாக தெரிவிக்கிறது. காங்கிரஸ் கட்சி அதன் வெற்றிகரமான காலங்களில் தலித் மக்களின் பாதுகாப்பையும், அவர்களுக்கான மரியாதையையும் குறித்து கவலை கொண்டதில்லை. மாறாக அதன் மோசமான நாள்களில் தலித் மக்களை பலி ஆடுகளாகப் பயன்படுத்து வருகிறது” என பதிவிட்டு விமர்சித்துள்ளார். 

மேலும் அவர், காங்கிரஸ் கட்சி தனக்கு சாதகமான காலங்களில் தலித் அல்லாதவர்களை முன்னிறுத்தியும், மோசமான காலங்களில் தலித் மக்களை முன்னிறுத்தியும் அரசியல் செய்வதாகக் குறிப்பிட்டுள்ள மாயாவதி உண்மையாலும் இது தலித் மக்களின் மீதான பாசம்தானா? என மக்கள் கேள்வி எழுப்பி வருவதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT