இந்தியா

சூரிய கிரகணம்: ஒடிசாவில் அக்.25ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு

சூரிய கிரகணத்தை யொட்டி ஒடிசாவில் பொது விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  

DIN

சூரிய கிரகணத்தை யொட்டி ஒடிசாவில் பொது விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்தியாவில் வருகிற 25-ஆம் தேதி மாலை 5.10 மணி முதல் 6.30 மணி வரையில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதையொட்டி, கோயில்களில் நடை அடைக்கப்படுவது வழக்கம். இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் தென்படும் இந்த சூரிய கிரகணம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் தமிழகத்தை பொறுத்தவரை மாலை 5.14 மணிக்கு தொடங்கி 30 நிமிடங்கள் வரை நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சூரிய கிரகணத்தையொட்டி ஒடிசாவில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

சூரியன் - சந்திரன் - பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம் என்பது ஏற்படும். அறிவியல்படி சந்திரனானது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே வரும் போது சந்திரனால் சூரியன் மறைக்கப்படுவதால் பூமியில் உள்ள நம் கண்களுக்கு சூரியன் தெரியாமல் போகின்றது. இதையே சூரிய கிரகணம் என்கிறோம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT