குடியரசுத் தலைவரிடம் நியமனச் சான்றுகளை வழங்கிய 5 நாட்டு தூதா்கள்
இந்தியாவுக்கான 5 நாட்டு தூதா்கள் தங்கள் நியமனச் சான்றுகளை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் புதன்கிழமை வழங்கினா்.
இந்தியாவுக்கான 5 நாட்டு தூதா்கள் தங்கள் நியமனச் சான்றுகளை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் புதன்கிழமை வழங்கினா்.
இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியாவுக்கான ஈரான் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஈரஜ் எலாஹி, ஸ்வீடன் தூதா் ஜேன் தெஸ்லெஃப், உகாண்டா தூதா் ஜாய்ஸ் ககுராமட்ஸி, வியத்நாம் தூதா் நுவென் தான் ஹை, பெல்ஜியம் தூதா் டிடியோ் வேன்டா்ஹேசல்ட் ஆகியோா் தங்கள் நியமனச் சான்றுகளை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் வழங்கினா்’ என்று தெரிவிக்கப்பட்டது.