வாத்துகளில் பறவைக் காய்ச்சல் உறுதி, இத்தனை வாத்துகள் அழிக்கப்படுகிறதா?
கேரளத்தில் வாத்துகளில் பறவைக் காய்ச்சல் உறுதியானதால் 20 ஆயிரம் வாத்துகளை அழிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளத்தில் வாத்துகளில் பறவைக் காய்ச்சல் உறுதியானதால் 20 ஆயிரம் வாத்துகளை அழிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்மூலம் மற்ற பறவைகளுக்கும் பறவைக் காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தின் ஆலப்புழாவில் ஹரிபாத் நகராட்சியில் உள்ள பறவைகள் இத்தகைய பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன.
Advertisement
இதையும் படிக்க: சமந்தாவின் ‘யசோதா’ டிரைலர் வெளியீடு
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: அண்மையில் போபாலில் உள்ள ஆய்வகத்திலிருந்து கொடுக்கப்பட்ட மாதிரிகளில் பறவைகள் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதனால் ஹரிபாத் நகராட்சியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வீடுகளில் உள்ள பறவைகள் அனைத்தும் பறவைக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய அபாயம் உள்ளது. அதனால், 20,471 வாத்துகள் ஹரிபாத் நகராட்சியில் கொல்லப்பட உள்ளன. இதனை செய்து முடிப்பதற்காக 10 பேர் கொண்ட 8 குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வாத்துகளை அழிக்கும் பணிகள் நிறைவடைந்தாலும் பறவைகளை கண்காணிக்கும் பணி தீவிரமாக நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.