முகப்பு
இந்தியா

தெலங்கானாவில் ராகுல் காந்தி! 50-வது நாள் நடைபயணம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைபயணம் தெலங்கானா மாநிலத்தில் இன்று தொடங்கியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் ஒற்றுமைக்கான நடைபயணம் தெலங்கானா மாநிலத்தில் இன்று தொடங்கியுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா்.

தமிழகத்தில் தொடங்கிய நடைபயணமானது கேரளம், கர்நாடகம், ஆந்திரத்தை கடந்து இன்று தெலங்கானா மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது. கடந்த 50 நாள்களாக 4 மாநிலங்களில் 1,230 கி.மீட்டர் தூரத்தை நடைபயணக் குழுவினர் கடந்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபயணமானது மூன்று நாள்கள் நிறுத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் பதவியேற்பு விழாவிலும் ராகுல் காந்தி பங்கேற்றார்.

இந்நிலையில், இன்று காலை 6.30 மணியளவில் நாராயணப்பேட்டை மாவட்டத்தில் ராகுல் காந்தியின் 50வது நாள் நடைபயணம் தொடங்கியுள்ளது.

வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி ஹைதராபாத்தை நடைபயணம் சென்றடைகிறது. அன்று சார்மினாரில் தேசியக் கொடியை ஏற்றும் ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் பேசவுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →