இந்தியா

பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் கண்டுபிடிப்பு!

DIN

பஞ்சாப் சர்வதேச எல்லைக்கு அருகில் பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் ஒன்று காணப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். 

எல்லையில் பாதுகாப்புப் படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, ஆளில்லா விமானம் பாகிஸ்தானுக்குத் திரும்பியது. 

முன்னதாக, அக்.27-ம் தேதி இரவு பெரோஸ்பூர் செக்டார் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்களை மீட்டனர். 

மேலும், இந்திய-பாகிஸ்தான் எல்லையில், ஒரு பையும், அதில் ஆறு ஏகே-47 ரக துப்பாக்கிகள், மூன்று கைத்துப்பாக்கிகள் உள்ளிட்டவைகளை கண்டுபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலை கேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்ஸா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT