கேரளத்தில் கட்டுமானத்தில் இருந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது!
கேரளத்தில், பெரிய நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் சனிக்கிழமை இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசர்கோடு: கேரளத்தில், பெரிய நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் சனிக்கிழமை இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டின் ஒரு பகுதியாக கான்கிரீட் அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்தில் கட்டட தொழிலாளிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
மேம்பாலம் இடிந்து விழுந்ததற்குக் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
விபத்து நடந்த இடத்தை மக்களவை எம்.பி ராஜ்மோகன் உன்னிதன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.