முகப்பு
இந்தியா

கேரளத்தில் கட்டுமானத்தில் இருந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது! 

கேரளத்தில், பெரிய நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் சனிக்கிழமை இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Updated On : 29 அக்டோபர் 2022, 1:16 pm IST
பகிர்:

காசர்கோடு: கேரளத்தில், பெரிய நகரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் சனிக்கிழமை இடிந்து விழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டின் ஒரு பகுதியாக கான்கிரீட் அமைக்கும் பணி நடந்துகொண்டிருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

இந்த விபத்தில் கட்டட தொழிலாளிக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

மேம்பாலம் இடிந்து விழுந்ததற்குக் கட்டுமான ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

விபத்து நடந்த இடத்தை மக்களவை எம்.பி ராஜ்மோகன் உன்னிதன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பார்வையிட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.